RSS
Write some words about you and your blog here

மனித நேயம்

சேலம் புதிய கலெக்டர் அலுவலகம் அருகில் நிர்வாணக் கோலத்தில் தட்டு தடுமாறியபடி வந்த முதியவரை அவ்வழியாக சென்றவர்கள் காட்சி பொருளாக கண்டனரே தவிர, அவரது மானத்தை மறைக்க யாரும் உதவிட முன்வராதது மனித நேயம் முற்றிலுமாக மரித்துப்போய் கிடக்கிறது என்ற வேதனையான உண்மையை உணர்த்தியது.

வாகனங்களின் இரைச்சலுக்கு மத்தியில் சேலம் மாநகரம் மூழ்கி கிடக்கிறது. வெளி மாவட்டங்கள் மட்டுமின்றி, வெளி மாநிலங்களைச் சேர்ந்தோரும் இங்கு ஏராளமானோர் உள்ளனர். மக்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப தவறுகளும், குற்றங்களும் அதிகப்படியாக உள்ளது. வாழ வழியின்றி தவிக்கும் கூட்டம் சாலையோர பிளாட்பார்ம்களில் வெயில், மழை பாராமல் கிடக்கின்றனர். மனநலம் பாதிக்கப்பட்டோர் அழுக்கு மூட்டைகளுடன் சுமைதாங்கிகளாக வீதியில் சுற்றிதிரிகின்றனர். அது ஒரு புறமிருக்க, உறவுகளால் ஒதுக்கப்பட்டவர்கள் பசி கொடுமையால் ஆடையின்றி குழந்தை மேனியாக வலம் வரும் நிகழ்வுகளும் சேலம் மாநகரத்தில் அதிகரித்துள்ளது. வசதி வாய்ப்பை பெருக்கிக் கொள்ள தன்னார்வ அமைப்புகளை உருவாக்கும் நபர்கள், இல்லாதோர், இயலாதோருக்கு உதவ முன்வருவதில்லை என்பதுதான் நிதர்சனமான உண்மை. சேலம் திருவள்ளுவர் சிலை அருகில் நேற்று மாலை கொட்டும் மழையில் உடலில் ஆடையின்றி முதியவர் ஒருவர் தட்டு தடுமாறியபடி புதிய கலெக்டர் அலுவலகம் நோக்கி வந்தார். வாகனங்களில் சென்றோர் அவரை வேடிக்கை பார்த்தபடி சென்றனரே தவிர, முதியவரின் மானத்தை மறைக்க யாரும் முன்வரவில்லை.

இந்நிலையில், அவ்வழியாக வந்த ஆட்டோ டிரைவர் நல்லாச்சி, தனியார் மொபைல் நிறுவன ஊழியர் சேதுராமன் இருவரும் முதியவருக்கு உதவ முன் வந்தனர். ஆட்டோ டிரைவர் தன்னிடம் இருந்த துண்டை எடுத்து அவருடைய இடுப்பில் கட்டி விட்டு மானத்தை மறைத்தார். மொபைல் நிறுவன ஊழியர் அருகில் இருந்த ஜவுளி கடையில் அண்ட்ராயரை வாங்கி வந்து அணிவித்து விட்டார். என்ன நடக்கிறது என்று தெரியாத நிலையில் முதியவர் சோர்ந்து கிடந்தார். அவர் பெயர், ஊர் விபரம் கேட்டபோது சொல்ல முடியாமல் தவித்தார். உறவுகளால் ஒதுக்கப்பட்டு நடுரோட்டுக்கு அடித்து விரட்டப்பட்டிருக்கலாம் என தெரிகிறது. தன் குடும்பம், தன் மக்கள் என்று ஓடுவோர் எண்ணிக்கை தான் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. ஒரு சிலர் மட்டுமே உதவும் மனப்பான்மையுடன் வாழ்ந்து வருகின்றனர். பெரும்பாலான மனிதர்களிடம் மனித நேயம் என்பதே மரித்துப்போய் விட்ட ஒன்றாகி விட்டது.

தண்டனை

மும்பையின் கொலாபா பகுதியில் கட்டப் பட்டு வருகிற ஆதர்ஷ் ஹவுசிங் சொசைட்டி என்ற 31 தளங்கள் கொண்ட அதி நவீன அடுக்கு மாடிக் கட்டடம்தான் பிரச்சனையின் மையம். அந்தக் கட்டடத்திற்கு அனுமதி அளிக்கப்பட்ட தில் நடந்துள்ள முறைகேடுகள் ஒரு சூறாவளி யாக மாநில காங்கிரஸ் அரசைப் புரட்டிக்கொண் டிருக்கின்றன.

காங்கிரஸ் கட்சியைப் பொறுத்தவரையில் ஊழல் விவகாரங்கள் எவ்வித உறுத்தலையும் ஏற்படுத்துவதில்லை என்பதுதான் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி முறைகேடுகள் உள்பட நாட்டின் அனுபவம். ஆனால், முதலில் 50 வீடு களுடன் 6 மாடிக் கட்டடத்திற்கான அனுமதியுடன் 2003ல் தொடங்கப்பட்ட இந்தத் திட்டம், 31 மாடிக் கட்டடமாக மாற்றப்பட்ட பிரச்சனையில் முட்டிக்கொண்டிருப்பது எத்தனை கோடி ரூபாய் கைமாறியது என்ற லஞ்ச லாவண்யம் மட்டுமே அல்ல; முதலமைச்சரின் உறவினர்களுக்கும் சில காங்கிரஸ் தலைவர்களுக்கும் அந்தக் கட்டடத்தில் வீடுகள் ஒதுக்கப்பட்ட கொடுக்கல் வாங்கல் மட்டுமே அல்ல.

இயற்கைச் சமநிலை, சுற்றுச் சூழல் விதிகள் ஆதர்ஷ் அத்துமீறலுக்காகப் புறக்கணிக்கப்பட்டிருக்கின்றன. அடிக்கடி புயல் பாதிப்புக்கு உள்ளாகும் மும்பை போன்ற நகரங்களின் மக்களுக்கு, இயற்கையைப் பகைக்கும் வன்முறையாகி யுள்ள இப்படிப்பட்ட கட்டடங்கள் பெரும் அச்சுறுத்தலாக உள்ளன.

முக்கியமான பிரச்சனை, இந்தத் திட்டம் யாருக்காகத் தொடங்கப்பட்டு பின்னர் தடம் மாற்றப்பட்டது என்பது. 11 ஆண்டுகளுக்கு முன், தீவிரவாதிகளோடு சேர்ந்து பாகிஸ்தான் ராணுவத்தினர் இமயத்தின் கார்கில் பனிமலையை ஆக்கிரமித்தனர். அதை முறியடித்த போரில் இன்னுயிர் நீத்த இந்திய வீரர்களுக்கு நாட்டின் நன்றிக்கடனாக, அவர்களது மனைவிமார்களுக்கு வீடு வழங்கவே ஆதர்ஷ் திட்டம் உரு வாக்கப்பட்டது. பின்னர், மற்ற ராணுவ அதிகாரி களுக்காகவும் என்று விரிவுபடுத்தப்பட்டது. அதற்குப் பின், ராணுவத்தினர் அல்லாதவர்களுக் காகவும் என்று மாற்றப்பட்டது. வீரர்களின் தியாகத்திற்கு அஞ்சலியாகத் தொடங்கப்பட்ட திட்டம், அப்பட்டமான வியாபாரத் தளமாகக் கொச்சைப்படுத்தப்பட்டது.

எந்த அளவிற்கு காங்கிரஸ் ஆட்சியாளர்கள் மனசாட்சியைத் துடைத்தெறிந்தவர்களாக, அரசுப் பதவியை சுயநலத்திற்குப் பயன்படுத்து கிறவர்களாக இருக்கிறார்கள் என்பது இதன் மூலம் மேலும் பளிச்செனத் தெரிகிறது. ஆதர்ஷ் மட்டுமல்லாமல் புனே நகரின் லவாசா அடுக்கு மாடிக் கட்டடம் உள்ளிட்ட பல திட்டங்கள் இவ்வாறு விதிமுறைகளைக் குழியில் தள்ளி கட்டப் படுபவையே என்றும் தகவல்கள் வந்துள்ளன. இந்தப் பின்னணியில் காங்கிரஸ் தலைமை உறுதியான நடவடிக்கை எடுத்தாக வேண்டும். இல்லையேல், தவறு செய்ததற்குத் தண்டனை என்பதைவிட, மாட்டிக்கொள்ளாமல் அந்தத் தவறைச் செய்யத் தவறியதற்காகவே தண்டனை என்ற மக்களின் குற்றச்சாட்டிலிருந்து தப்ப முடியாது.

ஆயிரத்தில் ஒருவன்